Welcome our site!

Welcom our channel... செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள Haamid இனையத்தில் இனைந்திருங்கள் Haamid உங்களை அன்புடன் வரவேற்கிறது.!

Friday, January 6, 2023

சொர்க்கத்தில் இடம்வாங்குவோம்.!

சொர்க்கத்தில் இடம்வாங்குவோம்.!

முன்னுரை


இந்த உலகத்தில் ஒரு சென்ட் நிலம் வாங்குவதற்கு நாம் படும் பாடு சாதாரணமல்ல. ஒவ்வொரு நாளும், வாடிக்கையாளர்களுடன் பலமணி நேரங்கள் பேசி, அதற்காக உழைத்து, பொருளாதாரத்தை திரட்டி, களவு போகாமல் அதனை பத்திரமாக சேமித்து, டுபாக்கூர் ஆசாமிகளிடம் ஏமாராமல் ஒரு இடத்தை வாங்குவதற்குள் பாதி உயிர் போய் விடும்.


இவ்வளவு சிரமத்திற்கு பின்னர் வாங்கிய அந்த இடம் நிரந்தரமானதா? என்றால் இல்லை. அந்த இடத்தில் கரண்ட், தண்ணீர் என அனைத்தையும் நாமே ஏற்பாடு செய்ய வேண்டும். பிறகு அதைப் பராமரிக்க வேண்டும்.


ஆனால் மறுமையில், சுவனத்தில் நாம ஒரு இடம் வாங்கினால் அதன் மதிப்பும், அதில் கிடைக்கும் சுகங்களுகம் சாதாரணமானவை அல்ல. மிகப் பிரம்மாண்டமானவை. அதற்குத் தான் அதிகமதிகம் ஒரு முஃமின் முயற்சி செய்ய வேண்டும்!


#சொர்க்கத்தில்_இடம்_கிடைப்பது


“சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவுக்கு இடம்(கிடைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பாளர் : சஹ்ல் பின் சஅத்(ரலி) 

நூல் : புகாரீ 6415


இந்த உலகத்தில் 10சென்ட் வைத்திருப்பவர்கள்கூட இன்றைக்கு 50லட்சம் இன்னும் 5வருடத்தில் 1கோடி என்று மகிழ்ந்து ஆட்டம் போடுவதைப் பார்க்கிறோம். இரவெல்லாம் அதை நினைத்துக்கொண்டு தூங்காமல் சந்தோசத்தில் மிதப்பதைப் பார்க்கிறோம். இதெல்லாம் இருந்து எத்தனை நாட்களுக்கு ஆடுவார்கள்? தமது வீட்டில் ஆசை ஆசையாக வாங்கிய ஏசி இருக்கும். அதை அனுபவிக்க இவர்கள் இருப்பார்களா?


ஆனால் மறுமையில் ஒரு சாட்டை வைக்கக்கூடிய அளவு இடம் கிடைப்பது என்பது இந்த பூமியும் அதில் உள்ளவற்றில் உள்ள அனைத்தையும்விட சிறந்தது என்றால் அந்த சொர்க்க வாழ்க்கைக்கு அழிவே கிடையாது என்பதுதான் இதன் அர்த்தம்.


#கேட்டதெல்லாம்_கிடைக்கும்


இந்த உலகத்தில் நாம் நினைத்த எதுவும் நடக்கவில்லை, நாம் நினைத்த எதுவும் நமக்கு கிடைக்கவில்லை என்று புலம்பும் மக்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்ன தேவையோ, அதெல்லாம் அந்த சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.


“அவர்கள் நினைத்தவை அவர்களுக்கு அங்கே உண்டு”.


அல்குர்ஆன் 25:17


என்ன கேட்டாலும் நமக்கு அங்கே கிடைக்கும் என்பதை அல்லாஹ் கூறுகிறான். இதற்காக அந்த சொர்க்கத்திற்கு நாம் ஆசைப்பட வேண்டும்.


#நோய்_இல்லை


சொர்க்க வாழ்க்கையை அனுபவிக்கும்போது எந்தத் தடையும் வரக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் நோயில்லாத சொர்க்க வாழ்க்கையை சொர்க்கவாசிகளுக்கு தந்திருக்கிறான்.


“மூக்கு சிந்தமாட்டார்கள். சளி துப்பவும் மாட்டார்கள்.” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) 

நூல் : முஸ்லிம் 5451


இந்த உலகத்தில் ஏதேனும் பெரிய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக இந்த சிறிய நோய்கள்தான் காரணமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஜலதோஷம்தான் பெரும்பங்கு வகிக்கிறது. ஜலதோஷம் பிடித்துவிட்டால் எந்த வேலையும் மனிதனுக்கு செய்ய முடிவது கிடையாது. மிகவும் சிரமப்படக்கூடிய நிலைமையை அடைகின்றனர். ஆனால் சொர்க்கத்தில் இது போன்ற எந்த பிரச்சனையும் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லுகிறார்கள்.


#சொர்க்கவாசிகளின்_துணைகள்


சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கின்ற அந்தத் துணைகளை நாம் சிந்தித்துப்பார்த்தால் இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் அழகா என்று கேட்கக்கூடிய நிலைமை வரும்.


“அவற்றில் பார்வைகளைத் தாழ்த்திய கன்னியர் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், ஜின்னும் தீண்டியதில்லை.” 

அல்குர்ஆன் 55:56


“சொர்க்கத்தின் மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒளிரும். மேலும், அப்பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும்.”


அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) 

நூல்: புகாரி 6568


வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்ததுள்ளது சொற்பமே! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) 

நூல்: முஸ்லிம் 5439


எனவே சொர்க்கத்தைப் பெறுவதற்கு அதிகமதிகம் முயற்சி செய்யும் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

அண்ணாமலையே வெளுத்து வாங்கிய சுந்தரவள்ளி


அண்ணாமலையே வெளுத்து வாங்கிய சுந்தரவள்ளி வீடியோ 👉https://fb.watch/hUgkvh-7lW/

தூக்கத்தி கெட்ட கனவு கண்டால் ...


 

மரணம் நிச்சயமானது.!


 

விமானத்தில் சிறுநீர் கழித்தவரை டிஸ்மிஸ் செய்தது அமெரிக்க நிறுவனம்

 ஏர் இந்தியா விமானத்தில் மது போதையில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் சிக்கிய நபர், தாம் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.



அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 'ஏர் இந்தியா' விமானம் கடந்த நவம்பர் 26ல் புறப்பட்டது. அப்போது, சக பயணி ஒருவர் குடிபோதையில், அதே வகுப்பில் பயணித்துக் கொண்டிருந்த 70 வயது பெண்ணின் இருக்கை அருகே நின்று அவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இது குறித்த புகாரில் அந்த சக பயணி ஷங்கர் மிஸ்ரா என தெரியவந்தது.



இந்த விவகாரத்தை ஏர் இந்தியா ஊழியர்கள் மிகவும் அலட்சியத்துடன் கையாண்டதால் விசாரணை நடத்த விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டது. டெல்லி போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுநீர் கழித்த நபரின் பெயர் ஷங்கர் மிஸ்ரா என்பது தெரியவந்தது. அவருக்கு டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.


இந்நிலையில் இந்த விவகாரம் ஷங்கர் மிஸ்ரா பணியாற்றி வரும் 'வெல்ஸ் பேர்கோ' (Wells Fargo) என்ற அமெரிக்க நிதிச் சேவை நிறுவனத்தின் கவனத்திற்கு சென்றது. இதனைத் தொடர்ந்து, ஷங்கர் மிஸ்ராவின் செயல் அநாரீகமானது, இது தங்களின் நிறுவனத்திற்கு பெரும் அவமானம் என கருதி ஷங்கர் மிஸ்ராவை இன்று பணி நீக்கம் செய்தது. இதற்கிடையே ஷங்கர் மிஸ்ராவை கைது செய்யும் நடவடிக்கைகளில் டெல்லி போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

Saturday, December 31, 2022

மரணம் ஓர் எச்சரிக்கை.!

மரணம் ஓர் எச்சரிக்கை.!
உலகில் பிறந்த ஒவ்­வொரு மனி­த­னுக்கும் மரணம் என்­பது நிச்­ச­ய­மா­னது. உல­கி­லுள்ள எந்த தரப்­பி­னரும் கருத்­து­வேற்­று­மைக்கு இட­மின்றி உறு­தி­யாக ஏற்­றுக்­கொண்ட ஒரு விடயம் மரணம் மட்­டுமே. உலகில் பிறந்த ஒவ்­வொ­ரு­வரும் அதனை சுவைத்தே தீர­வேண்டும் என்­ப­தனை அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். ஆனால், அந்த மரணம் பற்­றிய யதார்த்­த­மான பார்­வையும் அதற்குப் பின்­னா­லுள்ள உண்­மை­யான வாழ்வு பற்­றி­யுமே மனி­தர்­களில் பல தரப்­பினர் அறி­யா­மையில் உள்­ளனர்.

மரணம் உறு­தி­யா­னது என்­ப­தனை பல குர்­ஆ­னிய வச­னங்­களும் நபி­மொ­ழி­களும் எமக்கு தெளி­வு­ப­டுத்­து­கின்­றன.

நீங்கள் எங்­கி­ருந்த போதிலும் உங்­களை மரணம் வந்­த­டையும், உறு­தி­யான கோட்­டை­களில் நீங்கள் இருந்­தாலும் சரியே! (குர்ஆன் 4: 78)

“ஒவ்வோர் ஆத்­மாவும் மர­ணத்தைச் சுவைத்­தே­யாக வேண்டும், அன்­றியும் இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்­கைக)ளுக்­கு­ரிய பிரதி பலன்கள் முழு­மை­யாகக் கொடுக்­கப்­படும், எனவே எவர் (நரக) நெருப்­பி­லி­ருந்து பாது­காக்­கப்­பட்டுச் சுவர்க்­கத்தில் பிர­வே­சிக்­கு­மாறு செய்­யப்­ப­டு­கி­றாரோ அவர் நிச்­ச­ய­மாக வெற்­றி­ய­டைந்­து­விட்டார். இவ்­வு­லக வாழ்க்கை மயக்­கத்தை அளிக்­க­வல்ல (அற்ப இன்பப்) பொரு­ளே­யன்றி வேறில்லை.”

(அல்­குர்ஆன்- 3:185)

உல­கி­லுள்ள எவ­ராலும் அறிந்­து­கொள்ள முடி­யாத ஐந்து விட­யங்­களில் மர­ணமும் ஒன்­றாகும். அந்த ஐந்து விட­யங்­களும் எப்­பொ­ழுது நிகழும் என்­ப­தனை அல்­லாஹ்வைத் தவிர வேறெ­வரும் அறிய மாட்­டார்கள். அல்லாஹ் தனது திரு­ம­றையில் கூறும்­போது, “மறு­மைநாள் பற்­றிய அறிவு அல்­லாஹ்­வி­டமே உள்­ளது. அவன் மழையை இறக்­கு­கிறான். கரு­வ­றை­களில் உள்­ளதை அவன் அறி­கிறான். தான் நாளை சம்­பா­திக்­க­வுள்­ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே? மர­ணிப்போம் என்­ப­தையும் எந்த உயி­ரி­னமும் அறி­யாது. அல்லாஹ் நன்­க­றிந்­தவன்; நுட்­ப­மா­னவன்.”

(அல்­குர்ஆன்- 31 : 34)

மர­ணத்தைப் பற்றிப் பேசு­கின்ற இறைச் செய்­தி­களை அவ­தா­னிக்­கின்ற ஒருவர் மரணம் யாருக்கு, எப்­பொ­ழுது, எங்கு நிகழும் என்­ப­தனை அல்­லாஹ்­வை­யன்றி வேறு எவ­ராலும் அறிய முடி­யாது என்­ப­தனை மிக இல­கு­வாகப் புரிந்­து­கொள்வார். எந்­நே­ரமும் அதற்­கான தயார் நிலையில் நாம் இருக்க வேண்டும் என்­ப­துவே நாம் பணிக்­கப்­பட்ட ஒரே அம்­ச­மாகும்.

மர­ணத்தை எதிர்­கொள்ளும் வேளையில் மனி­தர்கள் இரு வகை­யி­ன­ராகப் பிரிக்­கப்­பட்டு உயிர் வாங்­கப்­ப­டு­கின்­றார்கள்.

1-. இறை­ம­றுப்­பா­ளர்கள், பாவி­களைப் பொறுத்­த­வ­ரையில் அவர்கள் மர­ணத்தைக் கண்டு விரண்­டோடக் கூடி­ய­வர்­க­ளா­கவே இருப்­பார்கள், உண்­மை­யான, நிரந்­த­ர­மான மறுமை வாழ்­விற்குப் பக­ர­மாக உல­கத்தின் சுக­போக வாழ்க்­கை­யையே அவர்கள் தமக்­கென்று தேர்ந்­தெ­டுத்துக் கொண்­டனர். அவர்கள் தமது கரங்­களால் செய்­த­வற்றின் உண்­மை­யான பெறு­பே­று­களை மரண வேளை­யி­லி­ருந்தே உணர ஆரம்­பித்­து­வி­டு­வார்கள். அது­பற்றி அல்லாஹ் தனது திரு­ம­றையில் இவ்­வாறு குறிப்­பி­டு­கிறான்:

அவர்­களில் ஒரு­வ­னுக்கு மரணம் வரும்­போது, அவன்: ‘என் இறை­வனே! என்னைத் திரும்ப (உல­குக்குத்) திருப்பி அனுப்­பு­வா­யாக!’ என்று கூறுவான். ‘நான் விட்டு வந்­ததில் நல்ல காரி­யங்­களைச் செய்­வ­தற்­காக’ (என்றும் கூறுவான்). அவ்­வா­றில்லை! அவன் கூறு­வது வெறும் வார்த்­தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்­பப்­படும் நாள்­வ­ரையும் அவர்கள் முன்னே ஒரு திரை­யி­ருக்­கி­றது.” (அல்­குர்ஆன்- 23:99-100)

ஆனால், “அல்­லாஹ்வின் மீது பொய்க் கற்­பனை செய்­பவன், அல்­லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்­றுமே அறி­விக்­கப்­ப­டா­ம­லி­ருக்க, ‘எனக்கு வஹீ வந்­தது’ என்று கூறு­பவன்; அல்­லது ‘அல்லாஹ் இறக்­கி­வைத்த இ(வ்வேதத்)தைப் போல் நானும் இறக்­கி­வைப்பேன்’ என்று கூறு­பவன், ஆகிய இவர்­களை விடப் பெரிய அநி­யா­யக்­காரன் யார் இருக்க முடியும்? இந்த அநி­யா­யக்­கா­ரர்கள் மரண வேத­னையில் இருக்­கும்­போது நீங்கள் அவர்­களைப் பார்த்தால், மலக்­குகள் தம் கைகளை நீட்டி (இவர்­க­ளிடம்) ‘உங்­க­ளு­டைய உயிர்­களை வெளி­யேற்­றுங்கள்; இன்­றைய தினம் உங்­க­ளுக்கு இழி­வு­தரும் வேத­னையைக் கூலி­யாகக் கொடுக்­கப்­ப­டு­வீர்கள். ஏனெனில், நீங்கள் உண்­மை­யல்­லா­ததை அல்­லாஹ்வின் மீது கூறிக் கொண்­டி­ருந்­தீர்கள்; இன்னும், அவ­னு­டைய வச­னங்­களை (நம்­பாது நிரா­க­ரித்துப்) பெரு­மை­ய­டித்துக் கொண்­டி­ருந்­தீர்கள்’ (என்று கூறு­வதை நீர் காண்பீர்)” (அல் குர்ஆன் 6:93)

“அல்­லாஹ்வை மறுப்­போரின் முகங்­க­ளிலும், முது­கு­க­ளிலும் வான­வர்கள் அடித்து அவர்­களைக் கைப்­பற்றும் போது, சுட்­டெ­ரிக்கும் வேத­னையை அனு­ப­வி­யுங்கள்! என்று கூறு­வதை நீர் பார்க்க வேண்­டுமே! நீங்கள் செய்த வினையே இதற்குக் காரணம், அல்லாஹ் அடி­யார்­க­ளுக்கு அநீதி இழைப்­பவன் அல்லன்.” (அல்­குர்ஆன்- 8: 50,51)

2- நல்­லோர்கள் மர­ணத்தை சந்­திக்கும் வேளையில் சுவ­னத்தைக் கொண்டு சுப­சோ­பனம் சொல்­லப்­பட்டு, அல்­லாஹ்வின் பிரத்­தி­யேக சுகந்­தங்­களைக் கொண்டு நன்­மா­ராயம் கூறப்­பட்ட நிலை­யிலே அவர்­களை நோக்­கி­வரும் வான­வர்­களை சந்­திப்­பார்கள். மர­ணித்தால் நான் சுவனம் சென்று விடுவேன் என்று வாழ்­கின்ற மனி­த­னுக்கு மரணம் ஒரு பெரிய சவா­லாக இருக்கப் போவ­தில்லை. மாற்­ற­மாக அவன் தனது ரப்பை சந்­திக்க எதிர்­பார்த்துக் காத்­தி­ருந்து, பெற்றுக் கொண்ட நல்ல சந்­தர்ப்­ப­மா­கவே அதனை கரு­துவான்.

நல்­லோ­ராக இருக்கும் நிலையில் அவர்­களின் உயிர்­களை வான­வர்கள் கைப்­பற்றி, “உங்கள் மீது ஸலாம் (சாந்­தியும் அமை­தியும்) உண்­டா­கட்டும்! நீங்கள் செய்­த­வற்றின் கார­ண­மாக சொர்க்­கத்தில் நுழை­யுங்கள்!” என்று கூறு­வார்கள் (அல்­குர்ஆன்- 16:32)

அல்லாஹ் கூறு­கின்றான்: “நிச்­ச­ய­மாக எவர்கள்: ‘எங்கள் இறைவன் அல்­லாஹ்தான்’ என்று கூறி, (அதன் மீது) உறு­தி­யாக நிலைத்து நின்­றார்­களோ, அவர்கள் பால் மலக்­குகள் வந்து, ‘நீங்கள் பயப்­ப­டா­தீர்கள்; கவ­லையும் கொள்ள வேண்டாம், உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கப்­பட்ட சுவர்க்­கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்’ (எனக் கூறி­ய­வாறு) இறங்­கு­வார்கள்.” (அல் குர்ஆன்- 41:30)

நபி­களார் (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்:

அல்­லாஹ்வைச் சந்­திக்க யார் விரும்­பு­கி­றாரோ அவரை அல்­லாஹ்வும் சந்­திக்க விரும்­பு­கிறான். யார் அல்­லாஹ்வின் சந்­திப்பை வெறுக்­கி­றாரோ அவ­ரது சந்­திப்பை அல்­லாஹ்வும் வெறுக்­கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி­னார்கள். அப்­போது ஆயிஷா (ரழி) அவர்கள் அல்­லது நபி­க­ளாரின் வேறொரு மனைவி அல்­லாஹ்வின் தூதரே! நாங்கள் அனை­வரும் மர­ணத்தை வெறுக்­கத்­தானே செய்­கிறோம் என்று கேட்­டார்கள், அதற்­க­வர்கள் அவ்­வாறு அல்ல. ஒரு மூஃமி­னுக்கு இறை­வனின் அருள் அவ­னது சுவர்க்கம் அவ­னது திருப்தி பற்றி நற்­செய்தி கூறப்­பட்டால் அல்­லாஹ்வின் சந்­திப்பை விரும்­பு­கிறான். அல்­லாஹ்வும் அவனைச் சந்­திக்க விரும்­பு­கிறான். ஒரு காஃபிர் அல்­லாஹ்வின் வேதனை, அவ­னது கோபம் பற்றி எச்­ச­ரிக்­கப்­பட்டால் அவன் அல்­லாஹ்வின் சந்­திப்பை வெறுக்­கிறான். அல்­லாஹ்வும் அவ­னது சந்­திப்பை வெறுக்­கிறான் என்று விளக்­க­ம­ளித்­தார்கள். அறி­விப்­பவர் ; உபாதா இப்னு ஸாமித் (ரழி)

நூல் – புஹாரி , 6026

ஓர் இறை விசு­வா­சியின் அக­ரா­தியில் உலக வாழ்க்கை என்­பது உல­கத்­தி­லி­ருந்து கொண்டே மறு­மைக்­காக வாழ்­வ­த­னையே குறிக்­கி­றது. அதற்­காக வாழ்­கின்ற ஓர் இறை விசு­வாசி தான் எதிர் பார்த்துக் காத்­தி­ருந்த, சுவன வாழ்க்­கை­யையும் மறு­மையில் அவ­னுக்கு வாக்­க­ளிக்­கப்­பட்ட அந்த இன்­பங்­க­ளையும் காண எவ்­வ­ளவு? பேரா­வ­லுடன் காத்­தி­ருப்பான், அந்த மறுமைப் பய­ணத்தின் நுழை­வா­யி­லான மர­ணத்தை எவ்­வ­ளவு? மகிழ்ச்­சி­யுடன் ஏற்­றுக்­கொள்வான்.

மரணம் சுவை­யா­னதா? அல்­லது சுமை­யா­னதா? என்­பதைத் தீர்­ம­னிப்­ப­தற்கே உலக வாழ்க்கை வழங்­கப்­பட்­டுள்­ளது, நல்ல மரணம் நிகழ்­ப­வ­ருக்கு அதன் பின்­னா­லுள்ள அனைத்தும் நல்­ல­தாக மாத்­தி­ரமே அமைந்து விடு­கி­றது, மோச­மான மரணம் நிகழ்­ப­வ­ருக்கு அதன் பின்­னா­லுள்ள அனைத்தும் மிக மோச­மா­ன­தாக மாத்­தி­ரமே அமைந்து விடு­கி­றது.

இஸ்லாம் மர­ணத்தை ஒரு மனி­தனின் உலக வாழ்­விற்கும் அவ­னது சுவர்க்க, நரக வாழ்­விற்கும் இடை­யி­லான ஒரு பிரி­கோ­டா­கவே நோக்குகிறது, இறைவனை மறுத்துவன், அவனுக்கு மாறுசெய்தவன் மரணிக்கின்றான் என்றால் அவன் அவனது சுகபோக வாழ்க்கையிலிருந்து, இறை நிராகரிப்பாளர்கள் பாவிகளுக்கு இறைவன் சித்தப்படுத்தி வைத்துள்ள தங்குமிடத்தை நோக்கிப் புறப்படுகிறான் என்றே பொருளாகும், உண்மையான இறைவிசுவாசி மரணிக்கின்றான் என்றால் அவன் உலகமென்ற சிறைச்சாலையிலிருந்து விடுபட்டு அவன் உண்மையாக வாழ வேண்டிய அவனது சுவனத்தை நோக்கிப் புறப்படுகிறான் என்றே பொருளாகும், இந்த நம்பிக்கை எமது உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடுமானால் நாம் மரணத்தைக் கண்டு ஒரு போதும் அஞ்சவோ நடுங்கவோ பயப்படவோ மாட்டோம், பிறரது மரண செய்தியைக் கேட்டதும் நொந்து, உடைந்து கலங்கிப் போகவும் மாட்டோம் என்பது தெளிவான உண்மையாகும்.

- ஹாமித் பின் முஹம்மது ரஹீம்

Irfan views troll

 #irfanviews #irfansviews #irfan